308
நாட்டில் 24 பிரதேசங்களில் டெங்கு நோய் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 68,118 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவாகியுள்ளதாக டாக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார் .
இம்மாதத்தில் மாத்திரம் இதுவரை 3,631 டெங்கு நோயாளர் பதிவாகியுள்ளனர்.
கடந்த மாதம் பதிவான டெங்கு நோயாளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஆயிரத்திற்கும் அதிகமான பதிவை காட்டுவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் சீரற்ற காலநிலை மற்றும் மழை, வெள்ளம் காரணமாக டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.