புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று புத்தளம் மன்னார் வீதி வில்பத்து ஹோட்டல் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்றது.
ஊவா சக்தி பவுண்டேசன், வை.சீ.எல் நிறுவனம் மற்றும் செனசிலி நிறுவனம் ஆகியவை இணைந்து இதனை ஒழுங்கு செய்திருந்தது. “சர்வஜன வாக்குரிமை தொடர்பில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வு நடைபெற்றது.
பிரதான வளவாளர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர் வசந்த டீ சில்வா, ஊவா சக்தி பவுண்டேசன் பணிப்பாளர்களான நடேசன் சுரேஷ், சுரேஷ் ஜீவரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். வை.சீ.எல். நிறுவனத்தின் புத்தளம் அங்கத்தவர்களும் இதில் பங்களிப்பு செய்திருந்தனர்.
(புத்தளம் தினகரன் நிருபர்)