Wednesday, April 24, 2024
Home » துருக்கியிலிருந்து வந்த முதல் நேரடி விமானம்

துருக்கியிலிருந்து வந்த முதல் நேரடி விமானம்

-நேற்று கட்டுநாயக்கவை வந்தடைந்தது

by sachintha
October 31, 2023 8:39 am 0 comment

துருக்கிய ஏர்லைன்ஸ் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்ததுடன், முதலாவது விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன்படி துருக்கியின் இஸ்தான்பூலில் இருந்து துருக்கி விமான சேவையின் முதல் விமானமான TK-730 நேற்று (30) காலை 05.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானத்தில் இருந்து 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் மீண்டும் துருக்கி-இஸ்தான்புல் நோக்கி 209 பயணிகள் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சுமார் 10 வருடங்களாக துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது விமான சேவைகளை நடத்தி வருவதாகவும் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் துருக்கியிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT