Friday, March 29, 2024
Home » இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன்

இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவேன்

- இந்திய லோக்சபா உறுப்பினரிடம் அமைச்சர் அலிசப்ரி தெரிவிப்பு

by sachintha
October 31, 2023 9:36 am 0 comment

தமிழ் நாட்டு மீனவர்கள் 27 பேரின் விடுதலையையும் துரிதப்படுத்துமாறு இந்திய லோக் சபா தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியிடம் அவரது அலுவலகத்தில் (28) சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தலைமையிலான குழுவினருக்கும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிக்குமிடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு அமைச்சரிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அலிசப்ரி, தமிழ் நாடு பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்துவேன். மேலும் இவர்களது விடுதலை சம்பந்தமாக உரிய அதிகாரிகள் ஊடாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உடனடியாக விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

மேலும் இரண்டு நாடுகளும் இணைந்து வடக்கில் மீன்பிடியாளர்களது பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வைப் பெற்றுத்தருமாறும் பாராளுமன்ற உறுப்பிணர் நவாஸ்கனி அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

(அஷ்ரப் ஏ சமத்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT