பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது இரண்டு பிரிவுகளில் இரண்டு கைத்தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டன.
ஏ மற்றும் பி பிரிவுகளிலேயே இந்த கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. குறித்த இரு பிரிவுகளிலும் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் இரண்டாம் தர குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாரிய குற்றவாளிகளின் சகாக்கள் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கைப்பற்றப்பட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.