Tuesday, March 19, 2024
Home » திருகோணமலை ரோட்டரி கழகத்தால் அனுஷ்டிக்கப்பட்ட உலக போலியோ தினம்

திருகோணமலை ரோட்டரி கழகத்தால் அனுஷ்டிக்கப்பட்ட உலக போலியோ தினம்

by Rizwan Segu Mohideen
October 30, 2023 3:37 pm 0 comment

திருகோணமலை ரோட்டரி கழகம் சார்பில் ‘உலக போலியோ தினம் 2023’ திருகோணமலை மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலய மாணவர்கள் மத்தியில் நினைவுகூரப்பட்ட்து.

2023 ஆம் ஆண்டின் உலக போலியோ தினத்தின் கருப்பொருள் ‘தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்’ என்பதாகும்.

உலக போலியோ நிலைமை மற்றும் சர்வதேச ரோட்டரி கழகத்தின் போலியோவை உலகில் இருந்து நீக்குவதற்கான செயல் பற்றிய முக்கிய விபரங்களை டொக்டர் ஞானகுணாளன் வழங்கினார். அத்துடன் இலங்கையில் இருந்து எவ்வாறு போலியோ நோய் ஒழிக்கப்பட்டது என்ற விபரத்தையும் அவர் எடுத்துக் கூறினார்.

சர்வதேச ரோட்டரி கழகத்தின் போலியோவை உலகில் இருந்து நீக்குவதற்கான செயற்பாடுகள் பற்றிய முக்கிய விபரங்களை மாணவர்கள் கேட்டு அறிந்து கொண்டார்கள். மேலும், ரோட்டரி தலைவர் ​ெடாக்டர் சௌந்தரராஜன் நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT