Saturday, April 20, 2024
Home » நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் மழைக்கு சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் மழைக்கு சாத்தியம்

- பி.ப. 2.00 மணிக்குப் பின் நாட்டின் பல பாகங்களிலும் மழை

by Rizwan Segu Mohideen
October 28, 2023 9:26 am 0 comment

இன்றைய தினம் (28) நாட்டின் பல பகுதிகளிலும் பிட்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கு சாதகமான வளிமண்டல சூழல் நிலவுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் ஏதிர்வுகூறியுள்ளது.

பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. அளவான பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ, மத்தியா, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT