Saturday, April 20, 2024
Home » நாட்டின் சில மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

நாட்டின் சில மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

- காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 50 மி.மீ அளவில் ஓரளவு பலத்த மழை

by Prashahini
October 26, 2023 9:05 am 0 comment

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT