Saturday, April 27, 2024
Home » குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிப்பு

குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிப்பு

by Prashahini
October 26, 2023 9:21 am 0 comment

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) இடம்பெற்றது.

நேற்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் நவாலி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 54 குடும்பங்களுக்கான காணி உரிமைப் பத்திரம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவால் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், காணி மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகன், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்தன் குணதிலாக மற்றும் துறைசார் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT