221
உக்குவளை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் தோட்ட செய்கையாளர்களுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் நேற்று விநியோகிக்கப்பட்டன.
உக்குவளை பிரதேச செயலக அலுவலகத்தில் தென்னங்கன்றுகள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க, பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார்.
மாத்தளை சுழற்சி நிருபர்