Saturday, April 20, 2024
Home » அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முல்லைத்தீவு மீனவர் நன்றி தெரிவிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முல்லைத்தீவு மீனவர் நன்றி தெரிவிப்பு

by sachintha
October 25, 2023 12:44 pm 0 comment

முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக இரண்டாம் கட்ட எரிபொருள் விநியோகத்துக்கான ஏற்பாட்டை செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அம்மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத் தலைவர் வி.அருள்நாதன், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட எரிபொருள் நாடளாவிய ரீதியிலுள்ள கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. முல்லைத்தீவில் 1,467 படகுகளுக்கு தலா 153 லீற்றர்படி எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.

இதேவேளை, கொரியாவுக்கு கடற்றொழில் அமைச்சர் சென்ற போது, கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்பாக கலந்துரையாடினார். கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார உதவியை விரைவில் கடற்றொழில் அமைச்சர் பெற்றுத்தர வேண்டுமெனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT