194
உலக போலியோ தினத்தையிட்டு ரோட்டரிக்கழகங்களின் ஏற்பாட்டில் சுன்னாகம் நகரில் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23) நடைபெற்றன. போலியோவிலிருந்து நிவாரணம் பெற்றுக்கொள்ள ரோட்டரிக்கழகத்தின் பங்களிப்பு அதிகமென்பதை வலியுறுத்தும் வகையில் போலியோ விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.
போலியோ விழிப்புணர்வு நிகழ்வில் சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகம், நல்லூர் ரோட்டரிக்கழகம், யாழ்ப்பாணம் பெனிசுலா ரோட்டரிக் கழகம் மற்றும் சுன்னாகம் ரோட்டரிக்கழகம் ஆகியவை பங்கேற்று விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தன.
சாவகச்சேரி விசேட நிருபர்