181
மாத்தறை – கொலொன்ன தடயம் கந்த பிரதேசத்தில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழுந்ததில், மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.இப்பரிதாபச் சம்பவம் நேற்றுமுன்தினமிரவு (22) ஏற்பட்டுள்ளது.தொரபனே பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 17 வயதுடைய மாணவரே, இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இம்மாணவனின் சடலம் ஓமல்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்மேடு சரிந்துள்ளமையால் அப்பகுதிக்கு செல்ல முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.