நாட்டில் மீன்களின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக பேலியகொடை மீன் வர்த்தக தொகுதி சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகளவு மீன் பிடிபடுவதால் சில மீன்களின் விலை 50% குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் நாட்டில் இக்காலங்களில் மீண்டும் மரக்கறிகளின் விலை அதிகரித்து வருவதாகவும் மரக்கறி வர்த்தக சங்கத்தினர் இதுதொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் சில மரக்கறிகளின் விலைகள் மிகவும் அதிகமான அளவில் அதிகரித்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாகவே மரக்கறிகளின் விலைகள் இந்தளவு அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, புறக்கோட்டை மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம். உபசேன இது தொடர்பில் தெரிவிக்கையில், பெருமளவிலான மரக்கறிகளின் விலைகள் மிகவும் அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்