Friday, March 29, 2024
Home » பாக். சிந்து மாநில முதல்வருடன் கிழக்கு ஆளுநர் சந்தித்து பேச்சு

பாக். சிந்து மாநில முதல்வருடன் கிழக்கு ஆளுநர் சந்தித்து பேச்சு

by damith
October 23, 2023 8:10 am 0 comment

பாகிஸ்தான் சிந்து மாநிலத்துக்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு சிந்து மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காரு அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கும் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநில முதலமைச்சர் மக்பூல் பக்காருக்கும், இடையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலில், இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள் மேசன், ஜவுளி துறை,மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி துறை உட்பட பல நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளையும், முழு ஒத்துழைப்பையும் வழங்க முதலமைச்சர் மக்பூல் பக்காரு ஒப்புக்கொண்டார். பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்திற்கு வருகை தருமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு உத்தியோகபூர்வ அழைப்பையும் அவர் விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT