Tuesday, March 19, 2024
Home » வாகன இறக்குமதிக்கான அனுமதி தற்போதைக்கு சாத்தியமில்லை
நாட்டில் போதியளவு உள்ளதால்

வாகன இறக்குமதிக்கான அனுமதி தற்போதைக்கு சாத்தியமில்லை

by damith
October 23, 2023 7:50 am 0 comment

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் தற்போதைக்கு இல்லையென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. எவ்வாறெனினும், தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய சகல இறக்குமதி கட்டுப்பாடுகளும் அண்மையில் தளர்த்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். உள்நாட்டில் போதியளவு வாகனங்கள் காணப்படுவதாக துறைசார் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் மற்றும் டொலர் கையிருப்பு போன்ற காரணிகள் தொடர்பில் மதிப்பீடுகளை செய்து, அதனடிப்படையில் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படும். எவ்வாறெனினும், தற்போதைக்கு தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கும் சாத்தியங்கள் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT