194
இலங்கையின் கொரிய உயர் ஸ்தானிகர் மியோன்லீ ( Miyon Lee) மற்றும் மத்திய மாகாண ஆளுநர் ல்லித் யூ.கமகே ஆகியோருக்கிடையில் கடந்த புதன் கிழமை (18) ஆளுநரின் கண்டியிலுள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் சிநேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.
சமய, கலாசார, பொருளாதார மற்றும் தொழில் நுட்ப பரிமாற்றம், சுற்றுலா அபிவிருத்தி என்பன தொடர்பிலும் இருவருக்கிடையே கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் மலையேற்றம் தொடர்பான சுற்றுலா வரை படம் ஒன்றைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் இச் சந்திப்பின் போது கவனம் செலுத்தப் பட்டமை விசேட அம்சமாகும்.
தம்புள்ள தினகரன் நிருபர்