Saturday, April 20, 2024
Home » மீன் வலையில் சிக்கிய பாரிய மலைப்பாம்பு

மீன் வலையில் சிக்கிய பாரிய மலைப்பாம்பு

- ஹட்டன் காசல்ரீ நீர்த்தேக்கப் பகுதியில் சம்பவம்

by Rizwan Segu Mohideen
October 22, 2023 1:13 pm 0 comment

ஹட்டன்- நோர்ட்டன், காசல்ரீ நீர்த்தேக்கப் பகுதியில் மீன் வலையில் மலை பாம்பொன்று சிக்கிய சமபவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் வழக்கமாக நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்கள் நேற்று (21) மாலை வலையை குறித்த பகுதியில் போட்டு விட்டு வந்துள்ளனர்.

இன்று (22) காலை சென்று பார்க்கும் போது வழமைப்போல மீன் பிடிக்கும் நபர் வலையை இழுத்துள்ளார். இதன்போது வலையை அதிக எடை கொண்டதாக காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அருகில் நின்றவர்களுடன் சேர்ந்து வலையை இழுத்த போது அதில் மலைப்பாம்பு சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றுள்ளனர்.

இது வரை காலமும் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழ்ந்ததில்லையென, சிறுவயதிலிலிருந்து மீன்பிடித் தொழில் ஈடுபடும் மீன் வலைக்கு சொந்தக்காரர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மலைப்பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஆயினும் வலையில் சிக்கிய மலைப்பாம்பு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்மை குறிப்பிடத்தக்கது.

நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் – எம்.கிருஸ்ணா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT