287
அம்பாறை மாவட்டமட்ட இளைஞர் கழக எல்லே விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பாலமுனை இளைஞர் கழக அணி மாவட்ட சம்பியனாகி தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இச்சுற்றுப் போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேசத்தை பிரதிநிதிதுவப்படுத்தி விளையாடிய பாலமுனை இளைஞர் கழக அணி நாவிதன்வெளி பிரதேச செயலக அணியினரை 1–2 என்ற புள்ளியடிப்படையில் வெற்றிபெற்று 2023ஆம் ஆண்டின் மாவட்ட சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்