Thursday, March 28, 2024
Home » மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கிவைப்பு

மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கிவைப்பு

by Prashahini
October 20, 2023 11:15 am 0 comment

மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் நிகழ்வு நேற்று (19) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

இவ் வருடம் ஏற்பட்ட மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட பருத்தித்துறை, தெல்லிப்பளை, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை மற்றும் வேலனை ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 52 மீனவர்களுக்கு தலா ஒருவருக்கு 45 ஆயிரம் ரூபா பெறுமதியான வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த பொருட்களை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் ஊடாக மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தினர் மீனவர்களுக்கு வழங்கி வைத்ததனர்.

பிரபாகரன் டிலக்சன் – யாழ்ப்பாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT