புத்தளம்,மதுரங்குளி ஏடிஎம் இயந்திரத்திலிருந்து ஒரு கோடி ரூபாவை கொள்ளையடித்த மூவர் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளை சம்பவம் இடம்பெற்று பத்து நாட்களுக்குள் புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
தனியார் வங்கியொன்றுக்கு சொந்தமான பத்தாம் கட்டை பிரதேசத்தில் அமைந்திருந்த தானியங்கி பணம் பரிமாற்று இயந்திரத்திலிருந்து ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை இவர்கள் கொள்ளையடித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் 92, இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பணத்துடன் நேற்று 17 ஆம் திகதி புத்தளம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் மதுரங்குளி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது கைது இவர்கள் செய்யப்பட்டுள்ளனர்.