கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் மருவி வரும் கிராமிய உணவு வகைகளின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் தரம் 10 மாணவர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களின் ஏற்பாட்டில் பாரம்பரிய கிராமிய உணவுக் கொண்டாட்டமொன்று அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் என்.எம்.மலீக், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர், பிரதி அதிபர்களான எம்.எச்.எம் அபூபக்கர், ஏ.எச்.எம்.அமீன், உதவி அதிபர் எம்.ஜெமீல், வகுப்பாசிரியர்கள், பகுதி தலைவர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
( மாளிகைக்காடு குறூப் நிருபர்)