தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி 08 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இவ்வாறு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் க.ரவிதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு உட்துறைமுக வீதியில் உள்ள சிங்கள மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து பேண்ட் வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு கௌரவிப்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் இரண்டு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவர்கள் வீதியின் இருமருங்கிலும் நின்று பாராட்டினார்கள்.
உலக ஐக்கிய சிலம்ப சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது முறையாக இம்மாதம் கடந்த 14,15 ஆம் திகதிகளில் கொழும்பு றோயல் மாஸ் அரேனா அரங்கில் வெகு பிரமாண்டமாக இடம்பெற்ற தெற்காசிய சிலம்ப போட்டிகளின் முடிவில் உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் எட்டு தங்கம், எட்டு வெள்ளி, ஐந்து வெண்கலம் உள்ளடங்கலாக இருபது பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
(அன்புவழிபுரம் தினகரன் நிருபா்)