அநுராதபுரம் மாவட்ட கெக்கிராவ, இஹல புளியங்குளம் பிரதேசத்தில் குவைத் நாட்டின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் (14) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், அல் ஹிமா இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூறுல்லாஹ் (நளீமி) விடம் விடுத்த வேண்டுகோளின்பேரில் இக்குடிநீர் வழங்கல் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கெக்கிராவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ரபீக், அல் ஹிமா அமைப்பின் வட மத்திய மாகாண இணைப்பாளர் உவைஸ், பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர். சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் இஹல புளியங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் 300 இற்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கெக்கிராவ குறூப், அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்கள்