245
விஜயனின் ஒரு கோடி தாவரங்கள் நாட்டும் திட்டத்தின் ஓர் அங்கமாக நவராத்திரி ஆரம்ப நாளில் கொடிகாமம் ஐயனார் கோவில் அருகாமையில் ஒரு தொகுதி மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் வைத்தியர் சிவகுமாரி சிதம்பரப்பிள்ளையின் நிதிப்பங்களிப்பில் இலங்கை முதலுதவிச்சங்க இந்து சமய தொண்டர் சபை ஊடாக மேற்படி மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டிருந்தன. மரக்கன்றுகள் நாட்டி வைக்கும் நிகழ்வில் கொடிகாமம் ஐயனார் ஆலய பூசகர், கிராம அபிவிருத்திச்சங்கத்தினர், முதலுதவிச்சங்க உறுப்பினர்கள் மற்றும் கொடிகாமப் பொலிஸார் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)