Friday, April 19, 2024
Home » விபுலாநந்தா மணிமண்டபத்தில் நவராத்திரி விழா

விபுலாநந்தா மணிமண்டபத்தில் நவராத்திரி விழா

by mahesh
October 18, 2023 6:50 am 0 comment

இந்து சமய கலாசார திணைக்களமும் காரைதீவு பிரதேச செயலகமும் காரைதீவு விபுலானந்தா பணிமன்றமும் இணைந்து மூன்றாவது வருடமாக தொடர்ச்சியாக நடத்துகின்ற நவராத்திரி விழா நேற்றுமுன்தினம்(16) திங்கட்கிழமை மாலை இரண்டாவது நாளாக மணிமண்டபத்தில் நடைபெற்றது.

அங்கு இரண்டாவது நாள் பிரதம அதிதியாக விபுலானந்தா மணி மண்டப ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார்.

மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ஏற்பாட்டில் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கதாபிரசங்கி நாகராஜா சனாதனன் பணிமன்ற உறுப்பினர்களான சிவராஜா நடராஜா மற்றும் அறநெறி மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

அறநெறி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட சரஸ்வதி படம் பொறித்த திருவுருவ படமும் பிரதம அதிதிக்கும் ஆசிரியைக்கும் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக 10 தினங்களிலும் இவ்வாறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

(காரைதீவு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT