Thursday, March 28, 2024
Home » கல்முனை நகரை பூச்சாடிகளால் அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

கல்முனை நகரை பூச்சாடிகளால் அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பம்

by mahesh
October 18, 2023 6:20 am 0 comment

கல்முனை நகரை அழகுபடுத்தும் (City Beautification) திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் வைக்கும் வேலைத்திட்டம் ​நேற்றுமுன்தினம் (16) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி. உதயகுமரன், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம். அமீர், வி. சுகுமார், எம்.ஏ. நிஸார், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.நௌசாத் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத்திட்டத்துக்கமைய முதற்கட்டமாக கல்முனை மக்கள் வங்கி சந்தி முதல் தரவைக் கோவில் சந்தி வரையான இருபக்க போக்குவரத்து பாதையின் நடுவே பூச்சாடிகளை வைத்து அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(கல்முனை விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT