Friday, April 26, 2024
Home » நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின் மழை

- ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

by Prashahini
October 17, 2023 8:48 am 0 comment

வெப்பமண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்குவலயம் (வடஅரைக்கோளத்திலிருந்தும் தென்அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையில் தாக்கம் செலுத்துகின்றது. இதன் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சிலஇடங்களில்100 மி.மீக்கும்அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் கரையோரப்பிரதேசங்களில் காலைவேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT