155
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்கள், அரசியலமைப்புக்கு முரணானதென தீர்ப்பிடுமாறு கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல்செய்துள்ளார்.
கர்தினால் ஆண்டகை உச்சநீதிமன்றத்தில் அந்த மனுவை தாக்கல்செய்துள்ளதுடன், அந்த மனுவின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயரை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)