Saturday, April 20, 2024
Home » இஸ்ரேல் மோதலுடன் தொடர்பு: அமெரிக்காவில் சிறுவன் கொலை

இஸ்ரேல் மோதலுடன் தொடர்பு: அமெரிக்காவில் சிறுவன் கொலை

by sachintha
October 17, 2023 6:01 am 0 comment

இஸ்ரேல் மற்றும் காசா மோதலுடன் தொடர்புபட்டு அமெரிக்காவில் முஸ்லிம் என்ற காரணத்தினால் ஆறு வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதோடு அவனது 32 வயது தாய் காயமடைந்துள்ளார்.

இல்லிநொயிஸில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 71 வயதான ஜோசப் க்சுபா என்ற ஆடவர் மீது கொலை மற்றும் வெறுப்புக் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காசா மோதல் காரணமாகவே இவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் ஒரு கேவலமான செயல் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சாடியுள்ளார்.

அந்த ஆடவர் பலஸ்தீன பூர்வீகம் கொண்ட அந்த குடும்ப வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் பொலிஸார் அங்கு விரைந்தபோது தாயும், மகளும் ஒன்றுக்கு மேற்பட்ட கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இருந்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT