Thursday, April 25, 2024
Home » அத்துமீறி மீன்பிடித்த 14 தமிழக மீனவர்கள் கைது

அத்துமீறி மீன்பிடித்த 14 தமிழக மீனவர்கள் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் அதிரடி

by damith
October 16, 2023 9:00 am 0 comment

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு, மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 15 இந்திய மீனவர்களும் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் தலை மன்னார் பொலிஸார் மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT