Thursday, April 18, 2024
Home » இடைநிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
பொருளாதார நெருக்கடி காரணமாக;

இடைநிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்கள் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

by damith
October 16, 2023 8:40 am 0 comment

நாட்டில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் கைவிடப்பட்ட ஒன்பது வீடமைப்பு திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க நடுத்தர மக்களுக்காக 2918 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டத்தின் அடுத்த கட்ட பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் ஒறுகொடவத்தை, பேலியகொட, பொரலஸ்கமுவ, ஸ்டேடியம் கம, மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இந்த ஒன்பது வீடமைப்பு திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி வீடமைப்பு திட்டங்களின் நிர்மாணப் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போதும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்தை இடைநிறுத்தியுள்ள நிலையில் மீண்டும் அந்த வீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிர்மாணப் பணிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT