Friday, April 26, 2024
Home » நாகபட்டினம் KKS கப்பல் போக்குவரத்து இரத்தானது
போதியளவு பயணிகள் முன்பதிவு இல்லை

நாகபட்டினம் KKS கப்பல் போக்குவரத்து இரத்தானது

திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் நடத்த எதிர்பார்ப்பு

by damith
October 16, 2023 6:30 am 0 comment

நாகை- – காங்கேசன்துறைக்கிடையே 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொளி காட்சி மூலம் ஆரம்பித்து வைத்தார். இந் நிலையில், போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் கப்பல் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு செல்லும் இந்த கப்பல் இனி திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT