Home » சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய இயக்குனரை சந்தித்தார் லெட்சுமனார் சஞ்சய்

சர்வதேச பாராளுமன்ற ஒன்றிய இயக்குனரை சந்தித்தார் லெட்சுமனார் சஞ்சய்

by damith
October 16, 2023 9:27 am 0 comment

சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜியருக்கும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய்க்கும் இடையிலான சந்திப்பு ஒன்று ஜெனிவாவில் உள்ள தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஸ்ணனின் வேண்டுகோளிற்கு இணங்க ஜெனிவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது விவாத கூட்டத்தொடரில் கலந்துகொள்ள மலையக மக்கள் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் அண்மையில் ஜெனிவா நாட்டுக்கு சென்றிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜிய்ரை சந்தித்து கலந்துரையாடலொன்றை சஞ்சய் லெட்சுமணார் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது இலங்கையின் அரசியல் நிலை குறித்தும், மலையகத்தின் இளைஞர்களின் அரசியல் பிரவேசம் சம்பந்தமாகவும், தற்காலத்தின் இலங்கையின் தேர்தல் நிலைக்குறித்தும், சமூக ஊடகங்களின் அடக்குமுறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக சஞ்சய் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தான் முன்வைத்த இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் இயக்குனர் ரோஜியர் இலங்கை நாட்டின் ஜனாதியுடனான சந்திப்பில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதாக நம்பிக்கை தெரிவித்ததாக லெட்சுமனார் சஞ்சய் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT