தொடை எலும்பு காயம் காரணமாக உலகக் கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெறாத சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு வெற்றிகரமாக சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது.
தொடை எலும்புப் பகுதியில் ஏற்பட்ட குறைபாட்டை சரிசெய்யும் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் “சிறிது காலம் செயற்படாமல் இருந்தபோதும் நாட்டுக்காக வலுவாக மீண்டும் திரும்புவேன்” என்றும் ஹசரங்க சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
லண்டனில் உள்ள பிரின்சஸ் கிரேஸ் வைத்தியசாலையிலேயே அறுவைச்சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பாரெஸ் ஹதத் இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
இதற்காக ஹசரங்க இலங்கை கிரிக்கெட் அணியின் மருத்துவ குழுவுக்கு மாத்திரமன்றி ஐ.பி.எல் அணியான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் முகாமையாளருக்கும் நன்றி கூறியுள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் போட்டியின்போது உபாதைக்கு உள்ளான ஹசரங்க அதன் பின்னர் நடந்த ஆசிய கிண்ண போட்டியிலும் பங்கேற்கவில்லை.