Friday, March 29, 2024
Home » உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை

by Prashahini
October 13, 2023 1:54 pm 0 comment

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெதண்டி தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.

லெதண்டி தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் பாதையிலே இன்று (13) காலை 8.00 மணியளவில் தோட்ட காரியாலய உத்தியோகஸ்தர் ஒருவர் இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்டு தோட்ட நிர்வாகத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த இடத்திற்கு வருகைத்தந்த ஹட்டன் பொலிஸார் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

நாளாந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் , தோட்ட உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் குறித்த பாதையில் சிறுத்தை இறந்து கிடப்பதை கண்டு பிரதேசவாசிகள் அச்சம் கொண்டுள்ளர்.

இறந்த நிலையில் காணப்பட்ட சிறுத்தையின் உடல் பகுதியில் காயங்கள் இருக்கின்ற நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் – எம்.கிருஸ்ணா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT