டெங்கு நுளம்புகள் பெருகுவதை கட்டுப்படுத்துமுகமாக நாச்சியாதீவு பிரதேச செயலக பிரிவின், நாச்சியாதீவு 535, 536 கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்று (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வில்” நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள், பொது மக்கள் பெருமளவில் பங்கு கொண்டு, பிரதேசத்தில் காணப்பட்ட குப்பை கூளங்கள், பொலித்தீன், சிரட்டை, வேற்று குரும்பை கோதுகள் போன்ற பல்வேறு கழிவுகளை அகற்றியதோடு, நுளம்புகள் பெருகும் இடங்களையும் அழித்து துப்புரவு செய்தனர்.
திறப்பனை பிரதேச சபை, ஹிதோகம பொலிஸ் நிலையம், பிரதேச சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இங்கு சுகாதார பிரிவினருடன் இணைந்து, நாச்சியாதீவு பஸார் வீதியை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திறப்பனை தினகரன் நிருபர்