Friday, April 19, 2024
Home » எண்ணெய் விலை உயர்வு

எண்ணெய் விலை உயர்வு

by Rizwan Segu Mohideen
October 10, 2023 2:11 pm 0 comment

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மோதல் தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் மசகு எண்ணெய் விலை 4 டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

பிரண்ட் மசகு எண்ணெய் 3 டொலர்களுக்கு மேல் உயர்ந்து பீப்பாய் ஒன்று 87.68 டொலர்களாக அதிகரித்திருப்பதோடு, அமெரிக்க விலைகளிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படாதபோதும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சர்வதேச விநியோகத்திற்கான மூன்றில் ஒரு பங்கு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவு பாரிய போர் வெடித்துள்ள சூழல் எண்ணெய் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தும் அச்சம் அதிகரித்துள்ளது. மசகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதேவேளை ஒரு பரந்த போர் குறித்த அச்சத்திற்கு மத்தியில் பொன் போன்ற பாதுகாப்பு முதலீடுகள் மீதான ஆர்வம் அதிகரித்ததை அடுத்து தங்கத்தின் விலையும் 1 வீதத்தால் நேற்று (09) உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT