அநுராதபுரத்தின் புறநகர் பகுதியான கும்பிச்சங்குளம் ஏரியில் மீன்கள் செத்து மடிவதற்கு பாசிகள் வளர்ந்து தேவையான அளவு ஒட்சிசன் குறைந்ததே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ஏரியில் நீர்மட்டம் குறைந்ததாலும், பாசிகள் பெருகியதாலும், ஏரியில் மீன்கள் அதிகமாக இருப்பதால், தேவையான அளவு ஒட்சிசன் குறைவதால் மீன்கள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ருவன் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களாக குறிப்பிட்ட இக்குளத்தில் உள்ள அதிகமான மீன்கள் செத்து கரை ஒதுங்கும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த காலங்களில் இக் குளத்தில் இலட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் விடப்பட்டு அவை நன்றாக வளர்ச்சிகண்ட நிலையில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
திறப்பனை தினகரன் நிருபர்