இன்று (09) அதிகாலை காலமான சிரேஷ்ட சிங்கள் நடிகர் ஜெக்சன் அந்தனியின் இறுதிச் சடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (12) இடம்பெறவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெக்சன் அந்தனியின் சடலம் இன்று (09) பிற்பகல் இலங்கம், 57, கடவத்தை – ராகம வீதி, வணிகசூரிய வத்தையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து நாளை (10) செவ்வாய்க்கிழமை பொரளையில் உள்ள மலர்ச்சாலையில் மு.ப. 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து, எதிர்வரும் வியாழக்கிழமை (12) பிற்பகல் 3.00 மணியளவில் ராகமவில் உள்ள புனித பேதுரு மற்றும் போல் தேவாலயத்தில் இறுதிக் சடங்கு இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
1958 ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் திகதி ராகமவில் பிறந்த அவர் தனது 65 வயதில் இன்று (09) காலமானார்.
அநுராதபுரம் தலாவ பகுதியில் வாகன விபத்திற்குள்ளாகி, கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிரேஷ்ட சிங்கள நடிகர் ஜெக்சன் அந்தனி இன்று காலை காலமானார்.
இதனைனத் தொடர்ந்து தற்போது ஜெக்சன் அந்தனியின் உடல் பொலிஸ் பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவரது உடல் தொடர்பான பிரேத பரிசோதனை அங்கு மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.