Thursday, March 28, 2024
Home » பலத்த மழையால் 07 பேர் மரணம் 23 பேர் காயம், 54,440 பேர் பாதிப்பு

பலத்த மழையால் 07 பேர் மரணம் 23 பேர் காயம், 54,440 பேர் பாதிப்பு

by damith
October 9, 2023 6:40 am 0 comment

நாட்டில் பெய்த கடும் மழையால் 07 பேர் உயிரிழந்து, 23 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 13,352 குடும்பங்களைச் சேர்ந்த 54,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இரத்தினபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயலகப் பிரிவுகளில் 273 குடும்பங்களைச் சேர்ந்த 1, 041 பேரும், கேகாலை மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 1,058 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மாவட்டத்தின் மூன்று செயலகப் பிரிவுகளில் 70 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்மாவட்டத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளது, 17 பேர் காயமடைந்துள்ளனர். களுத்துறை மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் 865 குடும்பங்களில் 3203 பேர் பாதிக்கப்பட்டு, கம்பஹா மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் 134 குடும்பங்களில் 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2, 114 குடும்பங்களைச் சேர்ந்த 8, 597 பேர் பாதிக்கப்பட்டு, மூவர் காயமடைந்துள்ளனர்.

காலி மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், புத்தளம் மாவட்டத்தின் இரண்டு பிரிவிலே 52 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT