Thursday, April 18, 2024
Home » எதிர்காலத்தில் அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்புகள் இல்லை

எதிர்காலத்தில் அரச சேவைக்கு புதிதாக ஆட்சேர்ப்புகள் இல்லை

புதிய அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே

by damith
October 9, 2023 6:10 am 0 comment

அரச சேவையில் எதிர்காலத்தில் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர வேறு எந்தவொரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்புக்கள் கிடையாதென அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போதைய பொதுப்பணித்துறை அரசுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “15 இலட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை 21 மில்லியனாகும். மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரசு ஊழியர் உள்ளனர். இது உலகின் மிக உயர்ந்த அரசு ஊழியர்களின் விகிதங்களில் ஒன்றாகும். இது பெரும் சுமையாக உள்ளதால் தொடர்ந்து அதனை மேற்கொள்ள முடியாது” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT