Home » வெள்ளத்தினால் பாதிப்படைந்த வயல்களுக்கு விரைவில் நஷ்டஈடு
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்

வெள்ளத்தினால் பாதிப்படைந்த வயல்களுக்கு விரைவில் நஷ்டஈடு

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு

by damith
October 9, 2023 8:52 am 0 comment

வரட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றினால் பாதிப்படைந்த வயல்களுக்கு நட்டஈட்டினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ளநிலைமை காரணமாக பாதிக்கபட்டுள்ள தங்காலை பிரதேச வயல்களை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்குதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் அமரவீர, தற்பொழுது ஹம்பாந்தோட்டை மாவட்டமெங்கும் பெய்துவரும் அடைமழையின் காரணமாக அறுவடை செய்வதற்கு தயார்நிலையில் இருந்த பலநூறு ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. கடந்த ஆறு, ஏழு மாதங்களுக்கு மேலாக வரட்சியான காநிலை காணப்பட்டது. அதனாலும் பல ஆயிரக்கணக்காண வயல்கள் பாதிப்படைந்தன, இதிலிருந்து பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் காப்பாற்றப்பட்ட வயல்களும் தற்பொழுது வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களுக்கு தேவையான நட்டஈட்டினைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT