மதுபோதையில் ஒருவருக்கு ஒருவ ர் போத்தல்களால் குத்திக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று எம்பிலிப்பிட்டிய, தணமல்வில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நண்பர்கள் மது அருந்ததி கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால் நண்பர்கள் இருவர் ஒருவரை ஒருவர் போத்தல்களால் குத்தி கொண்டதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை நடத்தி வரும் எம்பிலிப்பிட்டிய பொலிசார் தெரிவித்தனர்.
தணமல்வில, காமினிபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நண்பர்கள் மூவர் மது அருந்திக் கொண்டிருந்த போது கொலையுண்டவர் தனது நண்பரை ஒரு போத்தலால் குத்தியதாகவும் அதன் பின்னர் போத்தலால் குத்தப்பட்டவர் இன்னும் ஒரு போத்தலை உடைத்து கொலை செய்யப்பட்டவரைக் குத்தியதாகவும் பின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இறந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இக்கொலை தொடர்பில் இதே பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான சந்தேகநபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)