Home » 50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்தி

50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த பாரவூர்தி

by Prashahini
October 6, 2023 3:09 pm 0 comment

மத்திய மலைநாட்டில் அதிக பணி மூட்டம் காரணமாக நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹக்கல பகுதியில் பாரவூர்தி ஒன்று இன்று (06) விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின்போது பாரவூர்தி சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும், சாரதி மாத்திரம் காயமடைந்த நிலையில் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியில் உள்ள வளைவு ஒன்றில் செங்குத்தான பகுதியில் பிரதான வீதியை விட்டு விலகி பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலியையும் தகரத்துக்கொண்டு சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்கெமுத்து வருகின்றனர்.

குறித்த பகுதியில் இதற்கு முன்னரும் பல விபத்துக்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அங்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் பல வீதித்தடைகளை அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT