296
நாட்டில் டிசம்பர் மாதத்துக்குள் 01 கிலோ கோழி இறைச்சியை 850 ரூபாவுக்கு விற்பதற்கு எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற (04) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவனத்துக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனால், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டுமென்று கூறினர்.
தேவைப்பட்டால் தொடர்ந்தும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டுமெனவும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டார்.