வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக (Inclusive Connectivity & Development Project) உலக வங்கியின் கடன் திட்டத்தின் இலங்கை வதிவிட பிரதிநிதி DUNG ANH HOANG மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று நேற்று (05) செத்சிரிபாய, இராஜாங்க அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீதி வேலைகளின் முன்னேற்றங்கள் பற்றி ஆராயப்பட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 90.98 கிலோமீட்டர் நீளமான வீதி வேலைகளின் முன்னேற்றம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது. திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி DUNG ANH HOANG இது குறித்து அமைச்சருக்கு தெளிவுபடுத்தினார்.
மேற்படி வீதி வேலைகளுக்கான கேள்வி நடைமுறைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்த வதிவிட பிரதிநிதி DUNG ANH HOANG மிக விரைவில் வீதி வேலைகளை ஆரம்பிப்பதற்க்கான துரித நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.