Friday, March 29, 2024
Home » மேம்பாலத்திலிருந்து பஸ் விழுந்ததில் 21 பேர் பலி

மேம்பாலத்திலிருந்து பஸ் விழுந்ததில் 21 பேர் பலி

by gayan
October 5, 2023 7:48 am 0 comment

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகில் பஸ் வண்டி ஒன்று மேம்பாலத்தில் இருந்து விழுந்து தீப்பிடித்ததில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை (03) இரவு கட்டுப்பாட்டை இழந்த பஸ் வண்டி மேம்பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி கீழே தண்டவாளம் ஒன்றுக்கு அருகில் விழுந்துள்ளது. இதன்போது மின் கம்பி மீது பஸ் விழுந்ததால் அது தீப்பிடித்துள்ளது.

இந்த பஸ் வண்டியில் 40 பயணிகள் இருந்துள்ள நிலையில் 21 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 18 பேர் காயமடைந்ததாக வெனிஸ் நகர சபை உறுப்பினர் ரெனாடோ பொராசோ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT