227
இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகில் பஸ் வண்டி ஒன்று மேம்பாலத்தில் இருந்து விழுந்து தீப்பிடித்ததில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (03) இரவு கட்டுப்பாட்டை இழந்த பஸ் வண்டி மேம்பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு சுமார் 50 அடி கீழே தண்டவாளம் ஒன்றுக்கு அருகில் விழுந்துள்ளது. இதன்போது மின் கம்பி மீது பஸ் விழுந்ததால் அது தீப்பிடித்துள்ளது.
இந்த பஸ் வண்டியில் 40 பயணிகள் இருந்துள்ள நிலையில் 21 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 18 பேர் காயமடைந்ததாக வெனிஸ் நகர சபை உறுப்பினர் ரெனாடோ பொராசோ தெரிவித்துள்ளார்.