இலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரம் மற்றும் மீட்சிக்கான சாதக அறிகுறிகள் தென்படுவதாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் தெரிவித்தார்.
70% ஆக இருந்த பணவீக்கம் சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு ஒற்றை இலக்க நிலைக்கு குறைந்துள்ளதென்றும், வட்டி வீதங்களும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதிக சுற்றுலா, பணம் அனுப்புதல் மற்றும் மேம்பாட்டு பங்காளிகளிடமிருந்து வரும் வரவுகளுடன் மேலும் வெளிநாட்டு கையிருப்புகளும் பலப்படுத்தப்படும். “இது பயன்படுத்தக்கூடிய அதிகாரப்பூர்வ இருப்புக்களை உருவாக்க உதவியது. அந்நியச் செலாவணி வரவுகளின் அடிப்படையில் கணிசமான அதிகரிப்பைக் கண்டோம். இது இந்த ஆண்டின் முதல் பாதியில் மதிப்பிடப்பட்ட கொடுப்பனவுகளின் சமநிலைக்கு பங்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2022ல் அமெரிக்க ெடாலருக்கு நிகராக 81 சதவீதம் மதிப்பிழந்த பிறகு, 2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை இலங்கை ரூபா (LKR) 11 சதவீதம் உயர்ந்துள்ளது.
“ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் குறைந்துள்ள முதன்மைப் பற்றாக்குறையிலும் சரிவைக் கண்டோம். இது உண்மையில் IMF திட்டத்துடன் ஒத்துப்போவதுடன் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு குறித்தும் தற்போது தெளிவு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். பலவீனமான இறக்குமதி தேவை மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக மேம்பட்ட வர்த்தக சமநிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், வெளிப்புற வர்த்தகம் ஒடுக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள் .இது வெளிப்புற உலகளாவிய சூழலின் காரணமாக என்றே,நினைப்பதாகவும் நான் நினைக்கிறேன். ” என்றும் அவர் தெரிவித்தார்.