Friday, April 19, 2024
Home » மேல் மாகாணத்தில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனம்

மேல் மாகாணத்தில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனம்

பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்ப்பு

by mahesh
October 4, 2023 7:50 am 0 comment

மேல் மாகாணத்துக்கு சுமார் 4,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு வருவதாக மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார். எதிர்காலத்தில் புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கான நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படுமெனவும் தற்போது மேல்மாகாணத்தில் 4,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லாதது பெரும் பிரச்சினையாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT